Saturday, April 14, 2018

இறையுணர்வு


கடவுள் கருணையே வடிவானவராக இருக்கிறார். மனிதர்களுக்கு ஞானத் தந்தையாக விளங்கும் அவர், அதற்காக பிரதிபலனை எதிர்பார்த்து ஏங்கவில்லை அவர். அதற்கு ஈடாக அன்பு ஒன்றையே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார். கடவுள் புல் தழைப்பதற்கு மழையை அனுப்புகிறார். மனிதர்களுக்கு அதனைவிட மேலானவற்றை அவர் செய்வார். ஒரு மதத்திற்குரிய கடவுளல்ல அவர். மனிதர்களுக்கான கடவுள். பேதத்தை ஏற்படுத்தி நீங்கள் மோதிக் கொள்வதை வேடிக்கைப் பார்க்கும் கடவுளல்ல அவர். உங்களின் அன்னையை விட அன்வு மிகுந்தவர்.

கடவுளின் வாசற்கதவு எப்போதாவது தட்டப்படும் போது வியந்து போகிறார். கைவிடப்பட்ட உலகில் கடவுளைத் தேடுவது யாரென்று. இயற்கை கடவுளின் ஆளுமைக்கு உட்பட்டதா என்றால், ஆம் என்றும் கூறலாம் இல்லையென்றும் கூறலாம். இந்தப் விசாலமான பூமியில் மனிதக்கடவுளும், இயற்கையின் அதிபதியும் மோதிக் கொள்கிறார்கள். மனிதக்கடவுளிடம் அன்பு மட்டுமே இருக்கிறது. இயற்கையிடம் ஆயுதம் இருக்கிறது. கடவுள் இந்தப் பூமியில் அன்பு விதையை விதைத்துள்ளார். அது வளர்ந்து விருட்சமாக கோடிக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம்.

மனிதனும் மற்ற உயிரினங்களும் புவியீர்ப்பு சக்தியை எதிர்த்தே செயல்படுகின்றன. வளர்இளம் பருவத்தில் ஈர்ப்பு சக்தியை எதிர்த்து நம்மால் திறம்பட செயலாற்ற முடியும், வயது ஏற ஏற ஈர்ப்புவிசையை எதிர்க்கும் ஆற்றல் படிப்படியாக குறையத் தொடங்கும். உடல் தளர்ந்ததும் காந்த விசையைப் போல் செயல்பட்டு உடலின் இயக்கத்தை இறுதியில் நிறுத்துகிறது. உலகம் அழியும் வரை இயற்கை மனித இனத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.

கடவுள் அன்பிற்குரிய பாதைக்கு நம்மை அழைக்கிறார். இயற்கையோ மனிதனின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்டது. கொலைகாரனானாலும் என் மகன் என்று தாய் கரிசனம் காட்டுவதைப் போல கடவுள் நடந்து கொள்கிறார். இயற்கையோ கண்டிப்பாக தன் விதி பின்பற்றப்பட வேண்டும், அதன்படி அவன் ஆயுட்காலத்திலேயே குற்றத்திற்கான தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்கிறது.

மனிதன் ஆத்மாவோடு பிறப்பதில்லை. தமது செயல்களால் இறைவனிடமிருந்து பரிசாக ஆன்னாவை பெற்றுக் கொள்கிறான். காந்தியைப் போன்ற வெகு சிலரே ஆத்மாவை பரிசாகப் பெற்றிருக்கக் கூடும். மரணத்திற்கு பின்னால் சூன்யம் என்கிறார் புத்தர். இது ஒரு வகையில் உண்மை, எப்படியென்றால் பாவ காரியத்தில் ஈடுபட்டவன் இறப்புக்கு பிறகான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லப்படமாட்டான். பூமியில் புனிதராக வாழ்ந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் வானரசில் கடவுளோடு இன்றும் வாழ்ந்து கொண்டிக்கிறார்கள். மனதால் கூட பாவம் செய்யாதவர்கள் குறைவுதான், எனவே ஏறத்தாழ வெகுசிலரைத் தவிர மற்ற அனைவரும் சூன்யத்தையே தண்டனையாகப் பெறுகிறார்கள்.

பஞ்சபூதங்களாலான ஆகாயம், பூமி, நீர், காற்று, நெருப்பு, இவை ஒத்துழைக்கவில்லை என்றால் உலக அழிவைச் சந்தித்துவிடும். இயற்கையின் உந்துதல் தான் மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது. உலகம் போர்க்களமாக மாறியதற்கு இயற்கையே காரணம். குற்றவாளிக்கு இயற்கை தரும் தண்டனை என்னவென்று கடவுள் அறிந்தேயிருக்கிறார். கடவுளை உதாசீனப்படுத்தும் மனிதன், இயற்கையைக் கண்டு அச்சம் கொள்கிறான். எதிர்க்க வலுவில்லாமல் மறைவிடம் தேடி ஓடி ஒளிந்து கொள்கிறான். கடவுள் கீழே இறங்கி வந்தாலும் மனிதனின் இயல்பை மாற்ற முடியாது என்கிறது இயற்கை.

இயற்கை அனுமதிக்கும் வரைதான் மனிதன் பூமியை ஆள முடியும். மனிதக்கடவுள் துயரம் மிகுந்தவராக இருக்கிறார். உண்மையின் வழி நடப்பவர்கள் இறுதிக்காலத்தில் கூக்குரலிடும்போது அவரிடமிருந்து மெளனமே பதிலாக வருகிறது. மனிதக்கடவுள் மனிதனுக்கு உணர்த்த நினைப்பது இதுதான். மண்ணுக்கு நீ இரையாகும் முன்பே விழித்துக்கொள், இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் இறப்பு மிக்க் கொடியதாக அமைந்துவிடும். மேலும் கடலில் எழும் அலைகளுக்கு எங்கிருந்து கட்டளை வருகிறதென்று இன்று வரை எனக்குத் தெரியாது என்கிறார். இயற்கையின் கைதியாகிவிட்ட மனிதனை தன்னால் மீட்க முடியாத கையாலாகாத தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment