Wednesday, January 19, 2022

ஏலியன்கள் தான் கடவுளா? (இதுவரை வெளிவராத ரகசியங்கள்)


சிந்திக்கும் திறனுள்ள ரோபோவைக் கண்டுபிடிக்க மனிதன் முயன்று கொண்டிருக்கிறான். மனித இனம் உருவாகி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றது என்று வைத்துக்கொள்வோம். வெறும் தாவரங்களும், நீர்நிலைகளும், மலைகளும் பூமியில் இருந்த சமயத்தில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்துள்ளார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் வளர்ச்சியில் மனிதனின் இப்போதைய காலகட்டத்தைவிட உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். ஏலியன்கள் தான் வேற்றுக்கிரகத்தில் வாழ்ந்த மனிதர்களை பூமிக்கிரகத்தில் விட்டுச் சென்றிருக்கிறார்கள். மனிதர்கள் வாழ்ந்த கிரகம் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது என்று தெரியவந்ததால் ஏலியன்கள் மனிதர்களைக் காப்பாற்றும் பொருட்டு அவர்களை பூமியில் விட்டுச் சென்றிருக்கலாம்.

 

உலகம் அழியும் போது கடவுள் தோன்றுவார் என்று சமய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் ஏலியன்கள் வேற்றுக்கிரகத்தில் வாழ்ந்த மனிதர்கள் முன் தோன்றியிருக்கக்கூடும். ஏலியன்களின் உட்சபட்ச கண்டுபிடிப்பு மனிதனாகக்கூட இருக்கலாம். பூமியை தங்களது கேந்திரமாகப் பயன்படுத்த மனிதனை கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றன ஏலியன்கள். பூமியை வளப்படுத்துவது அவர்களது எண்ணமாக இருந்திருக்காது. ஏலியன்கள் தன்னை ஒத்த சக்தி படைத்த வேற்றுக்கிரகவாசிகளுடன் மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. அதனால் தான் மனிதனை சிருஷ்டித்து பூமியில் உலவவிட்டிருக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் எதிரிகள் பூமியை ஆக்கிரமிப்பு செய்வதிலிருந்து தடுத்துவிடலாம் என்பதுதான் ஏலியன்களின் திட்டமாக இருக்கும்.

 

வேற்றுக்கிரகத்தில் வாழ்ந்த தாக்கத்தினால்தான் மனிதர்களுக்கு கனவுகள் தோன்றுகிறது. அந்த கிரகம் சூரியனுக்கு வெகுதொலைவில் இருந்திருக்க வேண்டும் அதனால் தான் மனித இனத்துக்கு வெப்பம் தாங்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இதை மறுப்பவர்கள் ஒன்றை எண்ணிப்பார்க்க வேண்டும். டார்வினின் பரிணாமக் கொள்கையில் குரங்கு மட்டும் ஏன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். வேறு உயிரினங்கள் ஏன் பரிணாம வளர்ச்சி அடையவில்லை என எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

நோய்கள் அதிகமாக தாக்குவதற்குக் காரணம் இங்குள்ள தட்பவெப்பநிலையை மனித இனம் இன்னும் சமாளிக்க முடியாமல் திண்டாடுவதையே காட்டுகிறது. பூமியில் உள்ள எந்தவொரு உயிரினத்துக்கும் தான் மரணித்துவிடுவோம் என்ற உண்மை தெரியாது. மனிதனுக்கு மட்டும் அந்த உணர்வு எப்படித் தோன்றுகிறது. இது அவன் பூமியோடு சம்மந்தப்பட்டவனல்ல என்பதையே நிரூபிக்கிறது. வாழ்நாளில் பார்த்திராத ஒன்றைப் பற்றி ஓவியம் வரையச் சொன்னால் ஓவியரால் வரைய இயலுமா? நமது மூதாதையர்கள் ஏலியன்களை நேருக்கு நேராக சந்தித்ததினால்தான் திரைப்படங்களில் ஏலியன்களின் உருவத்தை துல்லியமாக மனிதர்களால் கொண்டுவர முடிந்தது.

 

ஏலியன்கள் மனிதர்களின் செயல்களை மட்டுமல்லாது அவர்களது எண்ண அலைகளைக் கண்டுபிடிக்கவே நிலவினை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என தெரிய வருகிறது. நிலா ஒரு spacejet ஆகக்கூட இருக்க வாய்ப்பிருக்கிறது. நம்மால் நிலவுக்குத்தான் மனிதனை அனுப்ப முடிந்தது. செவ்வாய்க்கு போனால் மனிதனால் திரும்ப முடியாது என நாசாவும் ஒத்துக்கொள்கிறது. அப்படியிருக்க எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பாலுள்ள கிரகத்திலிருந்து ஒளி வேகத்தைவிட அதிகமான வேகத்திறனில் எப்படி ஏலியன்களைச் சுமந்துகொண்டு பறக்கும்தட்டால் வர முடிகிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் தீவு இருக்குமென்றோ கடலைத்தாண்டி கண்டம் இருக்குமென்றோ அங்கு மனிதர்கள் இருப்பார்கள் என்றோ கூறுவதை அப்போது கட்டுக்கதை என்பார்கள் பைத்தியம் முத்திடிச்சி என்று கேலி செய்து சிரிப்பார்கள். இப்போதும் அப்படித்தான் மனிதஇனம் செய்து வருகிறது. மனித இனம் தன்னை மிஞ்சக்கூடியவர்கள் இப்பிரபஞ்சத்தில் இல்லை என்று அறைகூவல் விடுகிறது. மனிதன் விலங்குகளை அடிமைப்படுத்திவிட்டான். இயற்கையை தனக்குச் சாதகமாக வளைக்க முற்படுகிறான். அவனது உட்சபட்ச பேராசை மரணத்தை வென்றுவிட வேண்டுமென்பதே. கடவுள் பரமண்டலத்தில் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளும் நீங்கள் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் அதே அளவுகோலினை வைத்துப் பாருங்கள். உலக அழிவைப் பற்றிய வதந்திகள் அவ்வப்போது உலாவருகிறது. அப்படி உலக அழிவு உறுதியாகும் பட்சத்தில் நம்மால் நம் கண்ணெதிரே ஏலியன்களை காணுகின்ற வாய்ப்பினை பெறலாம்.

No comments:

Post a Comment